
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 93,733 என்று, ஒரு லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இது கடந்த 555 நாள்களில் பதிவான மிக குறைவான எண்ணிக்கை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பாளர்களுடன் ஒப்பிடுகையில், சிகிச்சையிலிருப்போர் விகிதம் 1%-க்கும் குறைவாக, சரியாக 0.27% என்று பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,73,952 என்றாகியுள்ளது. இறந்தவர்கள் விகிதம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், குணமடைவோர் விகிதம் அதிகரித்தும் வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 98.36% என்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,525 என்று பதிவாகியுள்ளது. இதன்மூலம் கொரோனாவிலிருந்து இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,40,89,137 என்றாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஆன்லைன் மூலம் கொரோனா இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3y3WR81
No comments:
Post a Comment