
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் இன்று முதல் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நியாய விலைக் கடை, வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டபம், வங்கிகள், சந்தைகள், மதுபானக் கடைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்வோர், கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசின் சார்பில் மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை உள்ளிட்ட 6 துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...போயஸ் கார்டன் இல்லத்தின் எந்த அறையும் சீலிடப்படவில்லை - ஜெ.தீபா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3ENnP6v
No comments:
Post a Comment