
நாடு முழுவதும் புதிதாக 7,774 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் இன்று புதிதாக 7,774 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,46,90,510 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,464 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,41,22,795 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் 92,281 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,75,434 பேர் கொரோனாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் நேற்று 89,56,784 பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும், இதுவரை மொத்தமாக 1,32,93,84,230 டோஸ்கள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.36 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.37 ஆகவும் உயர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3oLF6XU
No comments:
Post a Comment