Sunday, December 12, 2021

ஆந்திராவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி

ஆந்திர பிரதேசத்தில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக விசாகபட்டினம் வந்த 34 வயதான ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 27ஆம் தேதி ஆந்திராவுக்கு வந்த அந்த நபர் தற்போது தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெளிநாடுகளிலிருந்து ஆந்திரா வந்தவர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஆந்திரா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு கொரோனா பாதிப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/31VMc33

No comments:

Post a Comment